மற்ற நாடுகளைப் போலவே, சுவிட்சர்லாந்தும் Convention internationale sur l’élimination de toutes les formes de discrimination raciale (அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில்) கையெழுத்திட்டுள்ளது. கையெழுத்திடுவதன் மூலம், நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் நீக்குவதற்கு உறுதியளிக்கின்றன.
மக்கள் குழுக்களுக்கும் "இனங்களுக்கும்" இடையே புரிதலை ஊக்குவிப்பதற்கும் அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.
"இனம்" என்ற சொல் பெரும்பாலும் சட்டத்தில் பயன்படுத்தப் படுகிறது. இந்தக் காரணத்திற்காக, உண்மையில் மனிதனில் இனங்கள் இல்லாவிட்டாலும், "இனம்" என்ற வார்த்தையை நாமும் பயன்படுத்துகிறோம். மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் மக்களின் மனதிலும் மனப்பான்மையிலும், "இனங்கள்" என்ற எண்ணம் இன்னும் உள்ளது.
இது ஒரு சமூகக் கற்பிதம். இனப் பாகுபாடு இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது:
மக்கள், தங்கள் "இனம்" காரணமாக, தங்களுக்கு இடையே சமமாக இல்லை. மனிதனில் இனங்கள் இல்லாவிட்டாலும் கூட.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் தொடர்ந்து அறிக்கைகளை எழுத வேண்டும். தங்கள் நாட்டில் இனப் பாகுபாட்டை ஒழிக்க அவை என்ன செய்கின்றன என்பதை இனப் பாகுபாடு ஒழிப்புக் கமிட்டியிடம் முன்வைக்க வேண்டும் (Comité pour l’élimination de la discrimination raciale).
சுவிட்சர்லாந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சுவிட்சர்லாந்தும் இந்த அறிக்கைகளை எழுத வேண்டும்.
ஒரு நபர் அல்லது மக்கள் குழு இனவெறியால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சுவிட்சர்லாந்தில் அனைத்து வழிகளிலும் முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை என்றால், அவர்கள் இனப் பாகுபாடு ஒழிப்புக் கமிட்டியைத் தொடர்பு கொள்ளலாம் (Comité pour l’élimination de la discrimination raciale).
பின்னர் கமிட்டி, அந்த நபரின் பெயரைக் குறிப்பிடாமல், சம்பந்தப்பட்ட நாட்டிற்கு நிலைமையை அனுப்புகிறது.
பின்னர் கமிட்டி, நாட்டிற்கும் சம்பந்தப்பட்ட நபருக்கும் பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளுடன் ஒரு தீர்மானத்தை அனுப்புகிறது. இது நாட்டிலும் மக்களிடையேயும் இனவெறியின் யதார்த்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட நாடு இந்தப் பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் நீதிமன்றங்கள் சட்ட முடிவுகளை எடுக்க இந்தப் பரிந்துரைகளைப் பயன்படுத்துகின்றன.