கட்டாயக் கல்வி

கட்டாயக் கல்வி குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பைத் தொடர அடிப்படைப் பயிற்சியை வழங்குகிறது. பொதுப் பள்ளிகள் இலவசமானவை.

கல்வி நிலைகள்: வெவ்வேறு படிகள்

ஜூரா காந்தோனில், கட்டாயக் கல்வி 11 ஆண்டுகள் நீடிக்கும். ஜூலை 31 ஆம் தேதியில் 4 வயது உள்ள (அதாவது ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்பும் அல்லது அன்றும் பிறந்த) குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

கட்டாயக் கல்வி இரண்டு படிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  • ஆரம்பக் கல்வி 8 ஆண்டுகள் நீடிக்கும்.

மாணவர்கள் படிப்படியாக பின்வரும் பாடங்களில் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள்:

மொழிகள், கணிதம், அறிவியல், கலை, விளையாட்டு மற்றும் சமூக வாழ்க்கை.

  • இடைநிலைப் பள்ளி (இரண்டாம் நிலை I) மூன்று ஆண்டுகள் நீடிக்கும்.

அவர்களின் திறன்களைப் பொறுத்து, மாணவர்கள் வெவ்வேறு நிலை கல்விக்கு வழிநடத்தப்படுகிறார்கள். அவை அவர்களின் அறிவை விரிவுபடுத்துகின்றன.

கூடுதலாக, அவர்கள் மேலும் சுதந்திரமாகி தொழில் பயிற்சிக்குத் தயாராகிறார்கள்.

சிறப்புத் தேவைகள் அல்லது ஊனம் உள்ள குழந்தைகளுக்கு?

சிறப்புத் தேவைகள் அல்லது ஊனம் உள்ள குழந்தைகள் அவர்களின் பள்ளிப் படிப்பு முழுவதும் ஊக்குவிக்கப்பட்டு ஆதரிக்கப்படுகிறார்கள்.

அந்நிய மொழி பேசும் குழந்தைகளுக்கு?

பிரெஞ்சு மொழி பேசாத குழந்தைகள் சிறப்பு உதவி பெறுகிறார்கள்.

அரசு/தனியார் பள்ளிகள்

பொதுப் பள்ளிகள் இலவசமானவை. ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் ஒரே வகுப்பறையில் சேர்ந்து படிக்கிறார்கள். கற்பித்தல் மதத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

பெரும்பாலான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் கட்டாயக் கல்வியை ஒரு பொதுப் பள்ளியில் படிக்கின்றனர்.

ஜூரா காந்தோனில் ஒரு தனியார் பள்ளியும் உள்ளது: போரென்த்ரூயில் (Porrentruy) உள்ள செயிண்ட்-சார்ல் (St-Charles).

உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பினால், கல்விக் கட்டணத்தை நீங்களே செலுத்த வேண்டும்.

உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பது

ஜூலை 31 ஆம் தேதியில் 15 வயது வரை உள்ள (அதாவது ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்பும் அல்லது அன்றும் பிறந்த) பிள்ளைகள் கட்டாயப் பள்ளியில் சேருகிறார்கள்.

நீங்கள் ஜூரா காந்தோனில் உள்ள ஒரு புதிய கொம்யூனுக்கு குடிபெயர்ந்திருக்கிறீர்களா?

உங்கள் குழந்தை 15 வயது அல்லது 15 வயதுக்குட்பட்டவரா?

நீங்கள் குடிபெயர்ந்த பிறகு கொம்யூனுக்கு வருகிறீர்களா? உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க, உங்கள் புதிய கொம்யூனில் உள்ள பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

உங்கள் பிள்ளை 15 வயதுக்கு மேற்பட்டவரா?

நீங்கள் கட்டாயக் கல்விக்குப் பிந்தைய பயிற்சித் துறையை தொடர்பு கொள்ள வேண்டும். இந்தத் துறை பிள்ளைக்கு பயிற்சிக் கல்வியில் சேர உதவும்.

« Sport-Arts-Etudes » (விளையாட்டு-கலை-படிப்புகள்)

12 வயது முதல், உயர்நிலை விளையாட்டு அல்லது கலை நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள் « Sport-Arts-Etudes » (SAE) 'விளையாட்டு-கலை-படிப்புகள்' இல் சேரலாம். பெற்றோர்கள் கல்வித் துறைக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்.

பெற்றோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்

பள்ளி கட்டாயம் ஆனது. உங்கள் குழந்தை ஒரு சரியான சாக்கோ அல்லது காரணமோ இல்லாமல் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையா? அவர்கள் வகுப்பில் கலந்து கொள்ள முடியாதா? அப்படியென்றால் நீங்கள் பள்ளிக்குத் தெரிவிக்க வேண்டும்.

உங்கள் குழந்தை வீட்டுப்பாடம் செய்கிறதா என்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் குழந்தையின் பள்ளிப் படிப்பில் நீங்கள் ஆர்வமாக இருப்பதைக் காட்டுவது முக்கியம்.

அவர்களை ஆதரிப்பதும் ஊக்குவிப்பதும் முக்கியம்.

உங்கள் குழந்தையின் பள்ளி வாழ்க்கையின் அனைத்து அம்சங்கள் பற்றிய தகவல்களையும் பள்ளி உங்களுக்கு வழங்குகிறது.

இதைச் செய்வதற்கு வாராந்திர பதிவு புத்தகம் (வாராந்திர குறிப்பேடு), பள்ளியிலிருந்து வரும் கடிதங்கள் அல்லது பெற்றோருடனான சந்திப்புகள் ஆகிய பல்வேறு வழிகள் உள்ளன.

உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு முக்கியம். இது உங்கள் குழந்தையின் பள்ளிப்படிப்பு நன்றாக நடப்பதை உறுதி செய்கிறது.

கேள்விகள் உள்ளனவா? உதவி தேவையா?

பள்ளி பற்றிய ஏதேனும் கேள்விகளுக்கு, முதலில் ஆசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் குழந்தைக்கு ஏதாவது தேவை என்று ஆசிரியர் நினைத்தாலோ அல்லது ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ, அவர்களும் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட சிரமங்கள் அல்லது பிரச்சனைகள் உள்ளதா?

நீங்கள் ஆசிரியரைத் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் உங்களை பொருத்தமான நபர்களிடம் வழிநடத்துவார்கள்.

நீங்கள் பள்ளி சமூக சேவையாளரை அல்லது Centre d’orientation scolaire et professionnelle et psychologie scolaire (COSP) (பள்ளி மற்றும் தொழிற் கல்வி பற்றிய வழிகாட்டல் மற்றும் கல்வி உளவியல் மையத்தை). நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம்.