இனவெறி மற்றும் பாகுபாடு என்றால் என்ன?

இனவெறி என்பது ஒரு குழுவினர் அவர்களின் தோற்றம் (தோல் நிறம்), பிறப்பு அல்லது மதம் காரணமாக மற்றவர்களை விட சிறந்தவர்கள் அல்லது மோசமானவர்கள் என்று நினைப்பது ஆகும். இனவெறி அன்றாட வாழ்வில் (வேலை, வீடு தேடல், வீட்டாருடனான உறவு, முதலியன வற்றில்) காணப் படுகிறது. இது (புண்படுத்தும் பேச்சு, அவமதிப்பு, தாக்குதல், விலக்குதல், முதலிய) வெவ்வேறு வடிவங்களில் வெளிப் படுத்தப் படுகிறது. இனவெறி நமது சமூகத்திலும் நமது நிறுவனங்களிலும் வேரூன்றியுள்ளது. இது நமது பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இனவெறி என்றால் என்ன?

இனவெறி என்பது ஒரு குழுவினர் அவர்களின் தோற்றம் (தோல் நிறம்), பிறப்பு அல்லது மதம் காரணமாக மற்றவர்களை விட சிறந்தவர்கள் அல்லது மோசமானவர்கள் என்று நினைப்பது ஆகும்.

இனவெறி என்பது அதிகாரத்தைப் பற்றியது. இது சில குறிப்பிட்ட மக்கள் குழுக்களைப் பலவீனப்படுத்தவும் மற்றவர்களைப் பலப்படுத்தவும் பயன்படுகிறது.

வேலை, வீடு தேடல் அல்லது அண்டை வீட்டாருடனான உறவு போன்ற அன்றாட வாழ்க்கையின் பல பகுதிகளில் இனவெறி உள்ளது.

இனவெறி அவமதிப்பு, தாக்குதல் மற்றும் விலக்குதல் போன்ற பல்வேறு வடிவங்களை எடுக்கலாம்.

இனவெறி எப்போதும் வேண்டுமென்றோ அல்லது நனவாகவோ இருக்காது. இது நமது சமூகத்திலும், நிறுவனங்களிலும், சமூகப் பழக்கவழக்கங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. உதாரணமாக, கருப்பர்களுக்கு எதிரான இனவெறி, காலனித்துவம் மற்றும் அடிமைப் படுத்தல் ஆகியவற்றைக் கொண்ட நமது வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாகுபாடு

பாகுபாடு என்பது ஒரு நபர் அல்லது மக்கள் குழு, அவர்களின் தோற்றம் (தோல் நிறம்), பிறப்பு, மதம், பாலினம், பாலியல் நோக்குநிலை அல்லது ஊனம் காரணமாக நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதைக் குறிக்கிறது.

இனப் பாகுபாடு என்பது ஒருவர் மற்றவரின் தோற்றம் (தோல் நிறம்), பிறப்பு, அல்லது மதம் காரணமாக அவருக்கு அநீதி இழைப்பதைக் குறிக்கிறது.

இனவெறியின் பல்வேறு வடிவங்கள்

  • தனிநபர்களுக்கு இடையிலான இனவெறி: இவை பிறரின் பிறப்பு அல்லது தோற்றம் (தோல் நிறம்) காரணமாக ஓருவரிடம் ஏற்படும் தப்பெண்ணங்கள் அல்லது மூடிய மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறை. இது புண்படுத்தும் வார்த்தைகள், அவமதிப்பு, பாகுபாடு அல்லது வன்முறை மூலம் வெளிப்படுத்தப் படலாம்.
  • கலாச்சார இனவெறி: இனவெறி சார்ந்த முன்அனுமானங்கள் (ஸ்டீரியோடைப்கள்) காரணமாக சில கலாச்சாரங்கள் குறைத்து மதிக்கப் படுகின்றன அல்லது மதிக்கப் படுவதில்லை. "எல்லா ஆப்பிரிக்கர்களும் அல்லது எல்லா ஆசியர்களும்..." என்று நாம் நினைப்பது ஒரு ஸ்டீரியோடைப் ஆகும். திரைப்படங்கள், கலை அல்லது கலாச்சார படைப்புகளின் மூலம் ஸ்டீரியோடைப்கள் வலுப்படுத்தப் படலாம்.
  • கட்டமைப்பு இனவெறி (அல்லது கட்டமைப்புகளில் இனவெறி): இது சமூகத்தின் விதிகள் மற்றும் அமைப்பில் இனவெறி மற்றும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்போது நிகழ்கிறது.

யாரும் நேரடியாக விரும்பாவிட்டாலும் கூட, இது பெரும்பாலும் பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது.

  • நிறுவன இனவெறி (அல்லது நிறுவனங்களில் இனவெறி): பள்ளிகள் அல்லது வேலைச் சூழல் போன்ற சமூகத்தின் முக்கியமான நிறுவனங்களில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு காணப்படும் போது இது நிகழ்கிறது. நிறுவன ரீதியான இனவெறி எப்போதும் கண்ணில் படுவதில்லை. அது மறைக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாமல், எல்லாம் இயல்பாகத் தெரிகிறது.