இனவெறி என்றால் என்ன?
இனவெறி என்பது ஒரு குழுவினர் அவர்களின் தோற்றம் (தோல் நிறம்), பிறப்பு அல்லது மதம் காரணமாக மற்றவர்களை விட சிறந்தவர்கள் அல்லது மோசமானவர்கள் என்று நினைப்பது ஆகும்.
இனவெறி என்பது அதிகாரத்தைப் பற்றியது. இது சில குறிப்பிட்ட மக்கள் குழுக்களைப் பலவீனப்படுத்தவும் மற்றவர்களைப் பலப்படுத்தவும் பயன்படுகிறது.
வேலை, வீடு தேடல் அல்லது அண்டை வீட்டாருடனான உறவு போன்ற அன்றாட வாழ்க்கையின் பல பகுதிகளில் இனவெறி உள்ளது.
இனவெறி அவமதிப்பு, தாக்குதல் மற்றும் விலக்குதல் போன்ற பல்வேறு வடிவங்களை எடுக்கலாம்.
இனவெறி எப்போதும் வேண்டுமென்றோ அல்லது நனவாகவோ இருக்காது. இது நமது சமூகத்திலும், நிறுவனங்களிலும், சமூகப் பழக்கவழக்கங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. உதாரணமாக, கருப்பர்களுக்கு எதிரான இனவெறி, காலனித்துவம் மற்றும் அடிமைப் படுத்தல் ஆகியவற்றைக் கொண்ட நமது வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.