AVS: முதியோர் மற்றும் வாரிசு காப்பீடு (1வது தூண்)
முதியோர் மற்றும் வாரிசு காப்பீடு (AVS) என்பது அடிப்படை தேசிய ஓய்வூதியமாகும். AVS ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது.
ஓய்வூதியத்தின் தொகை, ஒருவர் பணியாளராக எத்தனை ஆண்டுகள் பங்களித்தார் என்பதைப் பொறுத்தது. அந்தத் தொகை, அவர் பெற்ற சராசரி சம்பளம் எவ்வளவு என்பதைப் பொறுத்தது.
ஒருவர் இறந்தால், இறந்தவரின் துணைவர் மற்றும் குழந்தைகளுக்கு AVS உதவி வழங்குகிறது (விதவன் அல்லது விதவை மற்றும் அனாதை ஓய்வூதியம்).
அனைத்து பெரியவர்களும் AVSக்கு பங்களிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் ஒரு பகுதி AVS நிதிக்காக பிடிக்கப் படுகிறது. இது பங்களிப்பு நிதியில் பாதி. மறு பாதியை நிறுவனம் செலுத்தும்.
சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வேலையில்லாத நபர்களும் தங்கள் பங்களிப்புகளைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்ய, அவர்கள் கொம்யூனிய AVS நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.