வேலையின்மை காப்பீடு
அனைத்து ஊழியர்களும் வேலையின்மை காப்பீட்டிற்கு (AC) பங்களிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் ஒரு பகுதி AC நிதிக்காக பிடிக்கப் படுகிறது. இது பங்களிப்பு நிதியில் பாதி. மறு பாதியை நிறுவனம் செலுத்தும்.
நீங்கள் வேலையை இழந்தால், வேலையின்மை நிதியிலிருந்து வேலையின்மை சலுகைகளைப் பெறுவீர்கள். வேலையின்மை சலுகைகளின் அளவு பல்வேறு அளவுகோல்களைப் பொறுத்தது.
நீங்கள் சுயதொழில் செய்பவரா?
அப்படியானால் வேலையின்மை காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது.