ஊனமுற்றோர் காப்பீடு

சில நேரங்களில், உடல்நலப் பிரச்சினைகள் அல்லது ஊனம் காரணமாக, ஒரு நபர் வேலை செய்ய முடியாது அல்லது இனி வேலை செய்ய முடியாது. அல்லது அவர் தன் வேலை நேரத்தைக் குறைத்து பகுதிநேர வேலை செய்ய வேண்டும். இது நீண்ட காலத்திற்கு நடக்கும். அப்படியென்றால் அந்நபர் ஓரு ஊனமுற்றோர் என்கிறோம். அந்நபர் சில நிபந்தனைகளின் கீழ் ஊனமுற்றோர் காப்பீட்டிலிருந்து (AI) நிதி உதவி பெற உரிமை உண்டு. AI பணம் மட்டும் செலுத்துவதில்லை. அது மக்கள் வேலைக்குத் திரும்பவும் உதவுகிறது. இது வேலையில் மறு இணைப்பு என்று அழைக்கப்படுகிறது.

ஊனமுற்றோர் காப்பீடு

ஊனமுற்றோர் காப்பீடு (AI) என்பது ஒரு அடிப்படை தேசிய காப்பீடு.

அனைத்து பெரியவர்களும் AI-க்கு பங்களிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி AI நிதிக்கு பிடிக்கப் படுகிறது. இது பங்களிப்பு நிதியில் பாதி. மறு பாதியை நிறுவனம் செலுத்தும்.

சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வேலையில்லாதவர்களும் தங்கள் பங்களிப்புகளைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்ய, அவர்கள் வசிக்கும் கொம்யூனில் உள்ள AVS/AI நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஊனமுற்றோர் காப்பீடு (AI) சேவைகள்

AI உதவிக்கு யார் தகுதியானவர்கள்?

(உடல் அல்லது மனநல) பிரச்சினைகள் அல்லது குறைபாடுகள் காரணமாக குறைந்தது ஒரு வருடத்திற்கு வேலை செய்ய முடியாதவர்கள் (அல்லது பகுதிநேரமாக மட்டும்) ஊனமுற்றோர் காப்பீட்டிலிருந்து (AI) உதவி பெற உரிமை உண்டு.

AI நிதி அல்லது ஆதரவு போன்ற பல்வேறு வடிவங்களில் உதவி வழங்குகிறது. உதாரணமாக:

• மறுவாழ்வு மற்றும் மறு இணைப்பு நடவடிக்கைகள் (பயிற்சி மற்றும் வேலை தேட),

• தினசரி கொடுப்பனவுகள், அல்லது

• ஓய்வூதியங்கள்.

ஒருவர் தனது உடல்நலம் அல்லது இயலாமை காரணமாக வேலை செய்ய முடியாது என்றால் மட்டுமே AI ஓய்வூதியத்தைப் பெறுகிறார்.

AI சலுகைகளைப் பெற, நாம் காந்தோனிய சமூக காப்பீட்டு அலுவலகத்தில் (AI அலுவலகம்) விண்ணப்பிக்க வேண்டும்.

AI யின் துணைப் பலன்கள் (AI யின் PC க்கள்)

AI ஓய்வூதியத்தில், சிலருக்கு தங்களின் (உணவு, வீடு போன்ற) அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லை.

இவர்கள் துணை சலுகைகளுக்கு (PC) தகுதி பெறலாம். அவர்கள் வசிக்கும் கொம்யூனில் உள்ள AVS/AI நிறுவனத்தில் PC க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

துணைப் பலன்களுக்கு யார் தகுதியானவர்கள், அல்லது அற்றவர்கள், என்பதற்கு தெளிவான விதிகள் உள்ளன.