செல்லப்பிராணிகளை வைத்திருத்தல்
கினிப் பன்றிகள், வெள்ளெலிகள், கேனரிகள் அல்லது மீன் போன்ற சிறிய செல்லப்பிராணிகளை வைத்திருக்க வாடகை குடியிருப்பில் வசிக்கிறவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இருப்பினும், வாடகை ஒப்பந்தத்தில் பூனைகள் அல்லது நாய்கள் போன்ற பெரிய விலங்குகளை வைத்திருப்பதை வீட்டு உரிமையாளர்கள் தடை செய்யலாம். அவர்கள் சத்தம் போடுகிற அல்லது ஆபத்தான விலங்குகளை தடை செய்யலாம். செல்லப்பிராணியை வளர்ப்பதற்கு முன், உங்கள் வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும்.
கூடுதலாக, விலங்கு உரிமையாளர்கள் கூட்டாட்சி விலங்கு பாதுகாப்பு சட்டங்களுக்கு இணங்க வேண்டும். உதாரணமாக, சில விலங்கு இனங்களை தனியாக வைக்கக்கூடாது (எ.கா. முயல்கள்) அல்லது சிலவற்றை பெரிய கூண்டுகளில் மட்டும் தான் வைக்க அனுமதிக்கப்படும்.
பல (அயற்பண்புடைய) விலங்குகள் சுவிட்சர்லாந்திற்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது. மற்றவற்றிற்கு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகத்தின் சிறப்பு அனுமதி (Service de la consommation et des Affairs vétérinaires - SCAV) தேவை.