ஆரம்ப தொழிற்கல்வி (தொழில்பயிற்சி)
கட்டாயக் கல்விக்குப் பிறகு, இளைஞர்கள் ஆரம்ப தொழிற்கல்வி (தொழில்பயிற்சி) தொடரத் தேர்வு செய்யலாம். இது ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள அனுமதிக்கும் ஒரு அடிப்படை பயிற்சித் திட்டமாகும்.
இரட்டைப் பயிற்சி (நிறுவனம் + பள்ளி)
பயிற்சியின் போது, இளைஞர்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அந்தத் தொழில் தொடர்பான நடைமுறைத் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் வாரத்தில் 1 அல்லது 2 நாட்கள் தொழிற்கல்விப் பள்ளிக்கு செல்கிறார்கள்.
இந்த வகைப் பயிற்சி இரட்டைப் பயிற்சி என்று அழைக்கப்படுகிறது: ஒரு பகுதி ஒரு நிறுவனத்திலும், மற்றொரு பகுதி தொழிற்கல்விப் பள்ளியிலும் நடைபெறுகிறது.
ஒரு தொழிற்கல்விப் பள்ளியில் தொழிற்கல்வி
நிறுவனங்களில் குறித்தகால பயிற்சிகளுடன், ஒரு பள்ளியில் முழுநேர பயிற்சிப் படிப்பை பெறவும் முடியும்.
பயிற்சிக் காலம்
ஒரு பயிற்சிப் படிப்பு 2 முதல் 4 ஆண்டுகள் வரை நீடிக்கும். இளைஞர்கள் ஒன்றிய தொழிற்கல்வி சான்றிதழ் (attestation fédérale de formation professionnelle - AFP) அல்லது ஒன்றிய திறன் சான்றிதழ் (certificat fédéral de capacité - CFC) பெறுகிறார்கள்.
ஒரு பயிற்சிப் படிப்பு டிப்ளோமாவுடன், இளைஞர்கள் வேலை தேடலாம்.
அவர்கள் உயர் தொழிற்கல்வி பயிற்சியையும் பெறலாம், பின்னர் சிறப்புக் கல்லூரியில் சேரலாம்.
கட்டாயப் பள்ளிப்படிப்பின் இறுதி ஆண்டில், இளைஞர்கள் தாங்களாகவே ஒரு நிறுவனத்தில் பயிற்சி வேலையைத் தேட வேண்டும். பெற்றோர்கள் இளைஞர்களுக்கு உதவ வேண்டும்.
Centre d’orientation scolaire et professionnelle et de psychologie scolaire (COSP) (பள்ளி மற்றும் தொழிற் கல்வி பற்றிய வழிகாட்டல் மற்றும் கல்வி உளவியல் மையம்) இளைஞர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி வழிகாட்டுகிறது.
‘MON APP’ செயலி, இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு தொழிலைக் கண்டறியவும், ஒரு தொழிற்பயிற்சியைக் கண்டறியவும் உதவுகிறது.