சமூகப் பாதுகாப்பு அமைப்பு

வாழ்க்கை சில நேரங்களில் நோய், விபத்து அல்லது வேலையின்மை போன்ற பிரச்சினைகளைக் கொண்டுவருகிறது. சுவிட்சர்லாந்தில், இந்த சூழ்நிலைகளில், சமூகப் பாதுகாப்பு குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கிறது. பல்வேறு சமூகக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம், சமூகப் பாதுகாப்பு உங்களிடம் வாழ்வதற்குப் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்கிறது. இது குடும்பங்கள் மற்றும் முதியோர்களையும் பாதுகாக்கிறது.

சமூகப் பாதுகாப்பு எவ்வாறு செயல்படுகிறது?

சமூகப் பாதுகாப்பின் நிதி எங்கிருந்து வருகிறது?

சமூகப் பாதுகாப்புப் நிதி பொதுவாக வேலையில் இருப்பவர்களிடமிருந்தும் அவர்களின் நிறுவனங்களிடமிருந்தும் வருகிறது.

சமூகப் பாதுகாப்பு நிதியை திரட்ட ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்திலும் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் பிடிக்கப் படுகிறது.

ஆரோக்கியமானவர்களிடமிருந்து வரும் பணம் நோய்வாய்ப் பட்டவர்களுக்கு உதவுகிறது. இளைய ஊழியர்களிடமிருந்து வரும் பணம் முதியோர் காப்பீட்டிற்குச் உதவுகிறது.

உதவி பெறும் சிறிய குழுவினருக்கு ஏராளமான குடியிருப்பாளர்கள் பணம் செலுத்துகிறார்கள்.

இது solidarité (ஒற்றுமைத்துவம்) என்று அழைக்கப்படுகிறது.

சமூக காப்பீடு பெரும்பாலும் கட்டாயமாகும். ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் ஒரு பகுதி சமூக காப்பீட்டு நிதிக்காக பிடிக்கப் படுகிறது.

சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வேலையில்லாதவர்களும் கட்டாயப் பகுதியை செலுத்துகிறார்கள்.

சமூக காப்பீடுகள் அனைத்தும் சட்டத்தால் கட்டுப்படுத்தப் படுகின்றன.

சமூக காப்பீட்டுகளின் பல்வேறு வகையான ஆதரவுகள்

சமூகப் பாதுகாப்பு மக்களுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவாக இருக்கிறது:

• ஓய்வூதியம் மூலம்: பணம் மாதந்தோறும் பல ஆண்டுகளுக்கு செலுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, AVS (முதியோர் மற்றும் வாரிசு) ஓய்வூதியம் அல்லது AI (ஊனமுற்றோர்) ஓய்வூதியம்.

• தினசரி கொடுப்பனவுகள் மூலம்: வேலை செய்யாத ஒவ்வொரு நாளுக்கும் பணம் செலுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வேலையின்மை காப்பீடு.

• துணைப் பலன்கள் (இவை: PC என்றும் அழைக்கப்படுகின்றன): வாழ்வதற்கு போதுமான பணம் இல்லாதவர்களுக்கு கூடுதலாக பணம் வழங்கப்படுகிறது.

நோய் அல்லது விபத்து ஏற்பட்டால், முழு அல்லது பகுதி மருத்துவச் செலவுகளை காப்பீடு கட்டும்.

எப்போது நிதி உதவி பெறுவோம்?

• ஓய்வு பெற்றவுடன் (65 வயதிலிருந்து): இது முதியோர் ஓய்வூதியம் (AVS உடன், மற்றவற்றுடன்),

• இறப்பு ஏற்பட்டால்: கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் முதியோர் மற்றும் வாரிசு ஓய்வூதியம் (AVS) பெறுகிறார்கள்,

• ஊனம் ஏற்பட்டால்: ஊனத்தினால் வேலை செய்ய முடியாவிட்டால், ஊனமுற்றோர் ஓய்வூதியம் (AI) கிடைக்கும்.

மேலும் கூடுதலாக:

• நோய் அல்லது விபத்து ஏற்பட்டால் (மருத்துவ மற்றும் விபத்து காப்பீடு),

• மகப்பேறு (மகப்பேறு காப்பீடு),

• வேலையின்மை ஏற்பட்டால் (வேலையின்மை காப்பீடு),

• குழந்தைகள் இருக்கும் போது (குடும்ப கொடுப்பனவுகள்).